அசைகள் என்றால் என்ன?
English syllable is அசை.
ஓரசை
இந்த ஓரசைகளை இரண்டு வகைப்படுத்தலாம்.
நேரசை மற்றும் நிரையசை.
1. குறில் எழுத்து மட்டும் தனியாக வந்தாலோ...
குறிலுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அது ஒரேஒரு அசை கொண்டது.
அதாவது ஓரசை.
(எ.கா)
மண், பொன், கல் மெய். க,வ,ப.
இது நேரசை
2. அதைப்போல நெடில் எழுத்து மட்டும் தனியாக வந்தாலோ...
நெடிலுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அதுவும் ஒரேஒரு அசை கொண்டது.
அதாவது ஓரசை.
(எ.கா)
கை, மை, வாய், நாள், நாம்.
இது நேரசை.
3.மேலும் இரண்டு குறில் இணைந்து வந்தாலோ...
அவற்றுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அதுவும் ஒரே ஒரு அசை கொண்டது.
அதாவது ஓரசை.
(எ.கா)
சட, படம், *மலர்*, மணம், புயல்
இது நிரையசை.
4.மேலும் ஒரு குறிலெழுத்துடன் ஒரு நெடில் இணைந்து வந்தாலோ...
அவற்றுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அதுவும் ஒரே ஒரு அசை கொண்டது.
அதாவது ஓரசை.
(எ.கா)
துணை, கடாம், மழை, குழாம்,
இதுவும் நிரையசை
இதுதான் அடிப்படை பாடம். நன்கு புரிந்து கொள்ளவும்.
அசைகள் சேர்ந்துதான் சொற்கள் அல்லது சீர்கள் உண்டாகுகின்றன.
ஈரசைச் சொற்கள்
எ.கா
இல்லறம் - இச்சொல்லில் இரண்டு அசைகள் உள்ளன.
இல் + லறம்.
*இல்* என்பது ஓரசை.
இது நேரசை
*லறம்* என்பதும் ஓரசை.
இது நிரையசை.
இனி வாய்ப்பாடு..
மாச்சீர்கள்
நேர் × நேர் - தேமா
(எ.கா) - காசு
நிரை × நேர் - புளிமா
(எ.கா) - பிறப்பு.
விளம்சீர்
நேர் × நிரை - கூவிளம்
நிரை × நிரை - கருவிளம்
அடுத்து மூவசைச்சீர்.
அது காய்ச்சீர், கனிச்சீர் என இரண்டு வகைப்படும்.
நான்கு காய்ச்சீரும்
நான்கு கனிச்சீரும் உண்டு.
அடுத்து நாலசைச்சீர்.
அது தண்பூச்சீர்
நறும்பூச்சீர்,
தண்ணிழல்சீர்
நறும்நிழல்சீர்,
என நான்கு வகைப்படும்.
நான்கு தண்பூச்ச்சீரும்
நான்கு நறும்பூச்சீரும்
நான்கு தண்ணிழல்சீரும்
நான்கு நறும்நிழல்சீரும்
உண்டு.
தமிழ்ச்சொற்களில் நான்கசைச்சொற்கள் வருவதே அரிது.
ஐந்தசை சீர்கள் வராது.
(எனக்குப் புரிந்த வகையில்)
ஆக....
இரண்டு - ஓரசைசீர்கள்
அதாவது
1.நேர்
2.நிரை
நான்கு - ஈரசைச்சீர்கள்
மாச்சீர்
1.நேர் நேர் - தேமா
2.நிரை நேர் - புளிமா
விளம்
3.நேர் நிரை - கூவிளம்
4.நிரை நிரை - கருவிளம்
எட்டு - மூவசைசீர்கள்
காய்ச்சீர் - 4
1.நேர் நேர் நேர் - தேமாங்காய்
2.நிரை நேர் நேர் - புளிமாங்காய்
3.நேர் நிரை நேர் - கூவிளங்காய்
4.நிரை நிரை நேர் - கருவிளங்காய்
கனிச்சீர் - 4
5. நேர் நேர் நிரை - தேமாங்கனி
6. நிரை நேர் நிரை - புளிமாங்கனி
7. நேர் நிரை நிரை - கூவிளங்கனி
8. நிரை நிரை நிரை - கருவிளங்கனி
பதினாறு - நான்கசை சீர்கள்
தண்பூச்சீர் - 4
1.நேர் நேர் நேர் நேர் - தேமாந்தண்பூச்சீர்
2.நிரை நேர் நேர் நேர் - புளிமாந்தண்பூச்சீர்
3.நேர் நிரை நேர் நேர் - கூவிளந் தண்பூச்சீர்
4.நிரை நிரை நேர் நேர் - கருவிளந் தண்பூச்சீர்
நறும்பூச்சீர் - 4
5. நேர் நேர் நிரை நேர் - தேமாநறும்பூச்சீர்
6. நிரை நேர் நிரை நேர் - புளிமாநறும்பூச்சீர்
7. நேர் நிரை நிரை நேர் - கூவிளம்நறும்பூச்சீர்
8. நிரை நிரை நிரை நேர் - கருவிளம்நறும்பூச்சீர்
தண்ணிழல்சீர் - 4
9.நேர் நேர் நேர் நிரை - தேமாந்தண்ணிழ்சீர்
10.நிரை நேர் நேர் நிரை - புளிமாந்தண்ணிழல்சீர்
11.நேர் நிரை நேர் நிரை - கூவிளந்தண்ணிழல்சீர்
12.நிரை நிரை நேர் நிரை - கருவிளந்தண்ணிழல்சீர்
நறுநிழல்சீர் - 4
13. நேர் நேர் நிரை நிரை - தேமாநறுநிழல்சீர்
14. நிரை நேர் நிரை நிரை - புளிமாநறுநிழல்சீர்
15. நேர் நிரை நிரை நிரை - கூவிளம்நறுநிழல்சீர்
16.. நிரை நிரை நிரை நிரை - கருவிளம்நறுநிழல்சீர்
குறிப்பு
வெண்பாக்களில் ஈற்றுச்சீர்(கடைசிசீர்) எப்போதும் ஓரசை அல்லது ஈரசை மட்டும் தான் வர வேண்டும்.
அதனால்தான்
நாள்
மலர்
காசு
பிறப்பு என்று கூறுகிறோம்.
இனி வெண்பா வாசித்தால் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு என்ன என்பதை முதலில் கண்டறிவோம் ..
இதுதான் அசை..